
கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த இரண்டு நாட்களில், கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 28,294 ஆக அதிகரித்துள்ளதென்றும், அதில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளதென்று தாய்லாந்தின் நோய் கட்டுப்பாட்டுத் துறை (DDC) தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மே 27ஆம் தேதி வெளிவந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த கோவிட்-19 எண்ணிக்கை 323,301 என்பதும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 69 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருகி வரும் கோவிட்-19 தொற்றிற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தவுடனேயே, பொதுமக்கள் மருத்துவர்களை அணுகவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மழைக்காலம் தொடங்கும் போது, தற்போதைய எண்ணிக்கையைக் காட்டிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாமென்று தாய்லாந்து நோய் கட்டுப்பாட்டுத்துறை கணித்துள்ளது.