
கோலா திரங்கானு, மே 19- கோலா திரங்கானுவில் போலி வேலை வாய்ப்பு திட்டத்தில், தனது தந்தையின் சேமிப்பு பணம் மொத்தத்தையும் முதலீடுச் செய்த இல்லத்தரசி ஒருவர் சுமார் 158,498 ரிங்கிட் தொகையை இழந்துள்ளார்.
30 வயதான அம்மாது, மே 9ஆம் திகதி,
இணையத்தில் வெளியிடப்பட்ட அந்த போலி வேலை வாய்ப்பு விளம்பரத்தில் மதிமயங்கி, வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு படிப்படியாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 498 ரிங்கிட்டைச் செலுத்தியுள்ளதாக கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.
பணத்தைச் செலுத்தியப் பிறகு, வாக்குறுதியளித்தபடி தனக்கு எந்த கமிஷனும் கிடைக்காததைத் தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார்செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டுமென்றும் அஸ்லி அறிவுறுத்தியுள்ளார்.