
கெரிக், ஜூன் 11 -நேற்று, கெரிக் தாமான் பூலாய் சவன்னா நீர் சுத்திகரிப்பு நிலையதிற்கு அருகில், SUV வாகனமொன்றில் 4.6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கெரிக் காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
இச்சோதனையில் 82.8 கிலோ எடையுள்ள ‘பேட்டமைன்’ பொட்டலங்களும், 40.36 கிலோ எடையுள்ள ‘கெட்டமைன்’ பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ‘ஹோண்டா’ வாகனம் திருட்டு வாகனமாக இருக்கக்கூடுமென்று சந்தேகிப்பதாகவும், அந்த வாகனம் செர்டாங்கிலிருக்கும் செவிலியர் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.