Latestமலேசியா

தேசியக் கல்வி மன்றத்தில் தமிழ்க் கல்விக்கு முன்னுரிமை வழங்குவீர் – வெற்றிவேலன்

கோலாலம்பூர், ஜூன் 4 – கல்வி அமைச்சுக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான MPN எனப்படும் தேசிய கல்வி மன்றம் அமைக்கப்படுவதை மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நல அபிவிருத்தி சங்கம் வரவேற்றுள்ளதோடு தேசிய கல்வி மன்றத்தில் தமிழ்க் கல்விக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிகை விடுத்துள்ளது.

அதோடு தமிழ்க் கல்வி அடிப்படையைக் கொண்ட கல்வி நிபுணர் ஒருவரையும் இந்த மன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட வேணடும் என தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நல அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அரசு சார்பற்ற இயகங்கள் வலியுறுத்தியிருப்பதாக அதன் தலைவர் ம.வெற்றிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளிகள், மலேசிய பன்முகக் கல்வி அமைப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

குறிப்பாக தோட்டப்புற மற்றும் நகர் சுற்றுவட்டப் பகுதிகளில் சிறுபான்மையினருக்காகக் கல்விச் சேவையை வழங்கி, மாணவர்களின் நற்பண்புகள், கட்டொழுக்கம் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்தி வருகின்றன.

இந்த வேளையில் தேசிய கல்வி மன்றம் உருவாக்கப்படுவது காலத்திற்கு ஏற்ற பொருத்தமான நடவடிக்கையாகும்.

நாட்டின் கல்விக் கொள்கையில் அனைத்து தாய்மொழி கல்விக்கும் சீரான அணுகுமுறை உறுதிப்படுத்த வேண்டும் என வெற்றிவேலன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!