Latestமலேசியா

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முற்பட்ட 7 வெளிநாட்டவர்கள் கிள்ளானில் கைது

ஷா ஆலாம், ஜூன் 17 – சிலாங்கூர், கிள்ளான், தெலுக் காடோங் (Teluk Gadong) வழியாக, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முற்பட்ட ஏழு அந்நிய நாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

பின்னிரவு மணி ஒன்று வாக்கில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

29 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட அவர்களில் ஐவர் ஆண்கள், இருவர் பெண் என்பதை, கோலா லங்காட் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் ரிட்சுவான் முஹமட் நோர் சாலே (Ahmad Ridhwan Mohd Nor Saleh) உறுதிப்படுத்தினார்.

சந்தேகிக்கும் வகையில் காணப்பட்ட அவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, பயணம் ஆவணம் எதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பது தெரிய வந்ததாக, ரிட்சுவான் சொன்னார்.

கடல்மார்கமாக சட்டவிரோதமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேல் விசாரணைக்காக அவர்கள் பந்திங் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக, அவர்கள் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் ரிட்சுவான் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!