Latestமலேசியா

பட்டர்வெர்த்தில் கொலை; 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்பட்ட குற்றவாளி கைது

பட்டர்வெர்த், மே 21- 2013ஆம் ஆண்டு, பட்டர்வெர்த்தில் இரவு விடுதியொன்றில் பாதுகாவலரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியைக் காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட 38 வயது ஓய் சின் லெங், இன்னும் சில ஆடவர்களோடு இணைந்துதான் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக அறியப்படுகின்றது.

அவ்வாடவன் சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் வாதிடாத நிலையில், நீதிபதி ஜாமீன் எதுவும் வழங்கவில்லை.

எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 சவுக்கடிகள் விதிக்கப்படலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!