Latestமலேசியா

மீண்டும் மலர்ந்த மனிதநேயம்; பார்வையற்றவருக்கு உதவிய வாகனமோட்டிகள்; பாராட்டும் வலைதளவாசிகள்

பெண்டாங், மே 27 – கெடா பெண்டாங்கில், வாகனங்கள் மிகுந்திருக்கும் சாலையைத், தட்டு தடுமாறி கடக்க முயற்சிக்கும், கண் பார்வையற்ற முதியவர் ஒருவருக்கு 2 வாகனமோட்டிகள் உதவும் காணொளி, வலைதளவாசிகளை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வாகன ‘டேஷ்கேம்’-இல், தடிகளுடன் முதியவர் தடுமாறும் காட்சியும், அவருக்கு மற்றொரு வாகனமோட்டி முதலில் உதவுவதும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றியவரும், அந்த முதல் வாகனமோட்டியுடன் இணைந்து முதியவருக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுனர்களின் கருணை பாராட்டக்குறியது என்றாலும், அருகாமையிலுள்ள மக்கள் இச்சம்பவத்தைப் கண்டும் காணாதது போல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுகின்றது என்ற கருத்து பதிவிடப்பட்டிருக்கிறது.

மேலும், முதிர்ந்த வயதில் பெற்றோர்களைத் தவிக்க விடும் பிள்ளைகள் கண்டிக்கத்தக்கவர்கள் என்றும் நமது மக்கள் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களை தனியாகப் விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!