
மலாக்கா, மே 7- மலாக்காவில், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தாயார், தன் பிள்ளைக்கு வலிப்பு என்று பொய் சொல்லிதான் மருத்துவமனையில் சேர்த்ததாக மலாக்கா காவல்துறைத் தலைவர் துல்கைரி முக்தார் (Dzulkhairi Mukhtar) கூறினார்.
பிறகு மருத்துவ ஊழியர்கள், தற்போதைய மற்றும் பழைய காயங்களின் அறிகுறிகளைக் கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சொந்த குழந்தையை இவ்வாறு கொடுமைப்படுத்திய பெற்றோர்களைப் போலீஸ் உடனடியாக கைது செய்து, அவர்களைத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றத்தில் உத்தரவு கோரியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்