![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-29-at-11.50.04-AM-700x470.jpeg)
பந்திங், ஜூன்-29 – சிலாங்கூர், பந்திங்கில் வீட்டொன்றின் வேலியேறி ஆடைகளையும் செருப்புகளையும் திருடிச் சென்ற ஆடவன் வைரலாகியுள்ளான்.
புதன்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் நிகழ்ந்த அத்திருட்டுச் சம்பவம் CCTV கேமராவில் 47 வினாடிகளுக்குப் பதிவாகியுள்ளது.
வீட்டின் முற்றத்தில் காயப் போட்டிருந்த ஆடைகளும் செருப்புகளும் மர்மமான முறையில் காணாமல் போனதாக 31 வயது ஆடவர் செய்த புகாரைத் தொடர்ந்து குவாலா லங்காட் போலீஸ் விசாரணையில் இறங்கியது.
அப்போது கைப்பற்றிய CCTV பதிவில், மர்ம நபர் வேலியேறி குதித்து வீட்டின் முற்றத்தில் நடமாடுவது தெரிந்தது.
திருடுப் போன பொருட்களின் மதிப்பு 200 ரிங்கிட் என கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ள போலீஸ், சந்தேக நபரை தீவிரமாகத் தேடி வருகிறது.
இவ்வேளையில் அண்டை வீட்டார் விழிப்போடு இருக்க வேண்டியே அந்த CCTV பதிவை சமூக ஊடகத்தில் புகார்தாரர் பதிவேற்றியதாக போலீஸ் கூறியது.