
கேப்டன் பிரபா’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 4 ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருப்பதை குற்றமாக வகைப்படுத்தும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நால்வரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
எனினும் அவர்கள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த ‘கேப்டன் பிரபா’ கும்பல் கொலை, கொள்ளை மற்றும் தீவைத்தல் போன்ற பல வன்முறை குற்றங்களில் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைகள் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட “Ops Jack Sparrow” என்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதியை நீதிமன்றம் பின்னர் அறிவிக்கும்.



