Latestமலேசியா

பாலிங் அருகே வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போன 4 வயது ஆட்டிசம் சிறுவன்

பாலிங், மார்ச்-29- கெடா, பாலிங் அருகே கம்போங் லண்டாக் பாயாவில் உள்ள வடிகால் மற்றும் நீர்ப்பாசன குடியிருப்பில், தனது வீட்டை விட்டு தனியாக வெளியேறிய ஒரு ஆட்டிசம் குழந்தை, நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பேச்சுக் கோளாறு உள்ள 4 வயது Fayyad Affan Fakhri, வீட்டின் பின் கதவு வழியாகச் சென்றதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து பாலிங் தீயணைப்பு-மீட்புத் துறை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

அதில் போலீஸ், பொதுத் தற்காப்புப் படையினர், மற்றும் கிராமவாசிகளும் இணைந்துள்ளதாக, பாலிங் தீயணைப்புத் துறைத் தலைவர் Zulkhairi Tanjil கூறினார்.

சிறுவனத் தேடி மீட்கும் பணிகள் இன்னமும் தொடருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!