புடு, ஜூன்-21 – தீப்பற்றி எரியும் ஒரு பகுதியை LRT ரயில் கடந்துச் செல்லும் போது, அதனுள் இருந்த பயணிகள் பதட்டமடைந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
ஸ்ரீ பெத்தாலிங் வழித்தடத்திற்கான LRT ரயில் புடு நிலையத்தைக் கடக்கும் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
தண்டவாளத்தின் அருகே தீ கொளுந்து விட்டு எரிவதைக் கண்டு LRT பயணிகள் சிலர் பதட்டமடைவது, X தளத்தில் பதிவேற்றம் கண்டுள்ள வீடியோக்களில் தெரிகிறது.
அப்பகுதியைக் கடக்கும் போது ரயிலினுள்ளும் தீயின் தாக்கத்தை உணர முடிந்தது; திடீரென சூடு அனல் பறந்ததாக பயணிகளில் ஒருவர் கூறினார்.
ரயிலும் தீப்பற்றிக் கொள்ளுமோ என தாமே பயந்தே போய் விட்டதாக பெண் பயணி சொன்னார்.
தாம் கண்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனக் கூறிய மற்றொரு பயணி, ரயில் பயணத்தின் போது அப்படியோர் அனுபவம் ஏற்பட்டது இது தான் முதன் முறை என்றார்.
நேற்று முன்தினம் இரவு புடு சாலையில் 7 புறம்போக்கு வீடுகள் தீயில் அழிந்ததாக முன்னதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.