Latestமலேசியா

சொல்லியபடியே அமைச்சர் பதவியைத் துறந்தார் ரஃபிசி ரம்லி

கோலாலம்பூர், மே-28 – டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்படைத்திருப்பதை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் அவர் உறுதிப்படுத்தினார்.

பதவி விலகல் ஜூன் 17-ஆம் தேதி நடப்புக்கு வருகிறது; அதுவரை, இன்று முதல் தாம் ஆண்டு விடுமுறையில் செல்வதாக அவர் சொன்னார்.

பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், அமைச்சரவையிலிருந்து விலகுவேன் என தேர்தல் பிரச்சாரங்களின் போது ரஃபிசி அறிவித்திருந்தார்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக தனது சேவைத் தொடருமென அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோலாலம்பூரில் 2 நாட்களாக நடைபெற்ற ஆசியான் உச்ச நிலை மற்றும் அதன் தொடர்பான மாநாடுகளே, அமைச்சராக ரஃபிசி கலந்து கொண்ட கடைசி அதிகாரப்பூர்வப் பணியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!