
ஜோகூர் பாரு,மே 21 – போக்குவரத்து விதிமுறையை மீறி கவனக்குறைவாக காரை ஓட்டியதாக உணவு விற்பனையாளர் ஒருவர் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மே 9 ஆம் தேதி காலை 9 மணியளவில் Jalan Gelang Patah- Ulu Choh சாலையின் 4ஆவது கிலோமீட்டர் வழியாக போக்குவரத்துக்கு விதிமுறைக்கு எதிராக பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டியதாக தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 26 வயதுடைய ஆடவர் மறுத்து விசாரணைக் கோரினார்.
ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட்வரை அபராதம் விதிக்கப்படும் 1987 ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டத்தின் 42இன் பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு 6,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணை முடியும்வரை மாதந்தோறும் ஒரு நாள் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி மாஜிஸ்திரேட் Nur Fatin Mohamad Farid உத்தரவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் .