Latestமலேசியா

மலேசியா முழுவதும் சுற்றுப்பயணிகளை ஏற்றி செல்ல இனி தாய்லாந்து பேருந்துகளுக்கு அனுமதி ; போக்குவரத்து அமைச்சு தகவல்

கோத்தா பாரு, மே 13 – தாய்லாந்தில் இருந்து வரும் பேருந்துகள், இனி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நுழைய அனுமதிக்கப்படும்.

அதற்கு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட பேருந்துகள், APAD எனப்படும் தரை போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.

அந்த நுழைவு அனுமதி, நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இதர அனைத்து மாநிலங்களையும் உட்படுத்தி இருக்குமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

சுற்றுலா பயண விவரங்கள், சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவை அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

எனினும், தாய்லாந்திலிருந்து வரும் வேன்களுக்கு அந்த அனுமதி வழங்கப்படாது.

உள்நாட்டு சுற்றுலாத் துறை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய தாய்லாந்து வேன்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, தாய்லாந்திலிருந்து வரும் பேருந்துகள், கிளந்தானில் நுழைவதற்கான கட்டுபாடுகள் குறித்து விவாதிக்க, மாநில அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என செய்திகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!