Latestமலேசியா

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு; இந்தியப் பிரஜைக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – கோலாலம்பூர், மஸ்ஜித் இந்தியாவில் இந்தியப் பிரஜையான மாது ஒருவர் நில அமிழ்வில் சிக்குண்டு காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ளார்.

அந்த எதிர்பாராத சம்பவத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு, உரிய ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு DBKL-லையும் அவர் உத்தரவிட்டார்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளுக்குத் தடையாக உள்ள அம்சங்களுக்கு உரிய தீர்வு கண்டு, அம்மாதுவைத் தேடி மீட்கும் பணிகளைத் (SAR) தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் மஸ்ஜித் இந்தியா சாலையில் நடந்து செல்லும் போது, திடீரென நிலம் உள்வாங்கியதில் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி 8 மீட்டர் குழிக்குள் விழுந்து காணாமல் போனார்.

இதுவரை அம்மாதுவின் செருப்பு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தேடி மீட்கும் பணி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இன்று மூன்றாவது நாளாகத் தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!