![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-27-Jun-2024-02-11-PM-5600.jpg)
மாராங், ஜூன் 27 – திரங்கானு, மாராங்கில், மூன்று ஆடவர்கள் பயணித்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, அது திருடப்பட்ட கார் என்ற உண்மை அம்பலமானது.
அதோடு, அக்காரை செலுத்திய ஓட்டுனரும், அவனுடன் பயணித்த இதர இரு ஆடவர்களும் போலீசாரால் தேடப்பட்டு வரும் நபர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று நண்பகல் மணி 12.30 வாக்கில், ஜாலான் கோலா திரங்கானு-குவந்தான் சாலையில், நான்கு சக்கர வாகனம் ஒன்று, ஹோண்டா சிட்டி காரை மோதி விபத்துக்குள்ளானதாக, மாராங் போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் திஎஸ் முஹமட் ரஸ்மான் செதபா (Ts Mohd Razman Setapa) தெரிவித்தார்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, ஹோண்டா சிட்டியின் வாகன பதிவு எண்ணும் போலியானது என்பது தெரிய வந்ததாக ரஸ்மான் சொன்னார்.
அவ்விபத்தில், நான்கு சக்கர வாகன ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 27, 28 மற்றும் 33 வயது ஆடவர்களுக்கு, சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
அம்மூவரும் சிகிச்சைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா (Sultanah Nur Zahirah) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை ; அவர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளது.
இவ்வேளையில், விபத்துக்குள்ளான ஹோண்டா சிட்டி, காஜாங்கில் காணாமல் போன கார் என்பதும் தெரிய வந்துள்ளது.