Latestஇந்தியாஉலகம்

ராபா நகரில் ஐ.நா வாகனம் மீது தாக்குதல்; இந்திய அதிகாரி மரணம்

புதுடில்லி, மே 16 – காஸாவின் Rafah நகரிலுள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு சென்ற ஐ.நா வாகனத்தின் மீது திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி Colonenl Waibhav Anill Kale மரணம் அடைந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் நெருக்கடி தொடங்கியது முதல் காஸாவில் மரணம் அடைந்த அனைத்துலக இயக்கத்தின் முதல் பணியாளர் 46 வயதுடைய Anil Kale என தெரிவிக்கப்பட்டது. அந்த தாக்குதலில் ஐ.நா வின் மற்றொரு பணியாளரும் காயம் அடைந்தார். Anill Kale வுக்கு மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற Anill Kale ஐ.நாவின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு துறையில் இரண்டு மாதங்களுக்கு முன் இணைந்ததோடு ஒரு மாதத்திற்கு முன்னதாக காஸா சென்றடைந்ததாக கூறப்பட்டது. இதனிடையே அவரது உடலை புதுடில்லிக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் நியூயார்க்கிலுள்ள இந்தியாவின் நிரந்தர அலுவலகம், டெல் அவிவ் மற்றும் ரமலாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!