Latestமலேசியா

வங்காளதாத்தில் நீடிக்கும் போராட்டம் ; பாதுகாப்பு கருதி, மலேசியர்கள் தயாகம் அழைத்து வரப்படுவார்கள் – பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 22 – வங்காளதேசத்தில் போராட்டம் மோசமடைந்துள்ளதை அடுத்து, அங்கிருக்கும் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வங்காளதேசத்தில், நடப்பு நிலவரத்தை வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருகிறது. எனினும், அங்குள்ள சூழல் நம் மாணவர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.

அதனால், அவர்கள் தனியார் துறை மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

குறிப்பாக, அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தொடர்பில், விமானத்தை வாடக்கை எடுப்பது குறித்து விவாதிக்க வெளியுறவு அமைச்சு விரைவில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக பிரதமர் சொன்னார்.

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட அரசாங்க வேலை ஒதுக்கீட்டை, அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து, இம்மாதம் முதலாம் தேதி தொடங்கி மாணவர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் வன்செயலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!