
கோலாலம்பூர், ஏப்-10 -வர்த்தக தொழில் மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், இதுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தொடக்கக் கட்டத்திலிருந்து இன்றுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஈடுபாடு எதுவும் இல்லை.
ஆனால், விசாரணையைத் தொடருமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நாங்கள் விசாரணையைத் தொடர்வோம்.
விசாரணைக்கு நாங்கள் அழைக்க வேண்டிய பல நபர்கள் உள்ளனர் என முகமட் காலிட் தெரிவித்தார்.
வெளிநாட்டில் உள்ள சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு தேவை என்று அவர் கூறினார்.
முன்னதாக, தொழில் நிறுவன மாபியாவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர் விக்டர் சின்னுக்குச் சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
விசாரணைக்கு உதவுவதற்காக, தொழிலதிபருக்குச் சொந்தமான பல இடங்களில் பங்கு ஆணையம் மற்றும் போலீஸ் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் இதற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, வதந்திகளில் பரவியது போல், தொழில் நிறுவன மாபியாவில் தனக்குத் தொடர்பு இல்லையென விக்டர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொழில் நிறுவனங்கள் முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க போலீஸ் மற்றும் எம்.ஏ.சி.சி உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ பாமி பாட்சில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.



