Latestஉலகம்

வாஷிங்டனில், கடந்த ஓராண்டாக மளிகை கடை கூரையில் தங்கி இருந்த பெண்ணால் பரபரப்பு

வாஷிங்டன், மே 14 – அமெரிக்கா, மிஷிகன் மாநிலத்திலுள்ள, மளிகை கடை கூரைப் பகுதியில், யாரும் அறியாமல், கடந்த ஓராண்டு காலமாக பெண் ஒருவர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூரையில், கடையின் பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்த பகுதியில் அவர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு வீட்டில் உள்ளதை போல, காப்பி பானம் தயாரிக்கும் இயந்திரம், மடிக்கணினி, பதிப்பு இயந்திரம் உட்பட சமையல் அறையையும் அந்த 34 வயது பெண் அங்கு அமைத்திருந்தது தான்.

எனினும், அப்பெண் எவ்வாறு மேலே ஏறி இறங்கினார் என்பது தெரியவில்லை.

அங்கு தங்கி இருந்ததால், அப்பெண்ணுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை என, மிட்லெண்ட் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட கடையின் கூரையை பழுது பார்க்க சென்ற குத்தகையாளரிடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து, அச்சம்பவம் குறித்து கடையின் பணியாளர்கள் போலீசில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!