Latestமலேசியா

விபத்துக்குள்ளான இரு TLDM ஹெலிகாப்டர்களின் இடிபாடுகள் ; முழுமையாக அழிக்கப்படும்

லூமுட், ஜூன் 4 – பேராக், லூமுட், அரச மலேசிய கடற்படை தளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி, பத்து பேரின் உயிரை பலிகொண்ட, அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் முழுமையாக அழிக்கப்படும்.

கடந்த வாரம் அவ்விபத்து மீதான இறுதி விசாரணை நிறைவடைந்து, முழு அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் அதனை தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற கோர விபத்துகள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதும் உறுதிச் செய்யப்படும்.

விபத்து என்பது எதிர்பாராத ஒன்று. அச்சம்பவத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை, எதிர்காலத்தில் வழிகாட்டியாக கொள்வோம் என அமைச்சர் சொன்னார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, காலை மணி 9.30 வாக்கில், லூமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில், 90-வது அரச மலேசிய கடற்படை தின அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள், நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!