Latestமலேசியா

விரைவுப் பேருந்தில் கடத்தப்பட்ட 30 பச்சை ஓணான்கள் பறிமுதல்

ஜெலி – மே-25 – விரைவுப் பேருந்தில் 30 பச்சை ஓணான்களைக் கடத்தும் முயற்சி கிளந்தான் ஜெலியில் முறியடிக்கப்பட்டது.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெலி போலீஸும் சோதனையில் பங்கேற்றது.

பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில், கெடாவிலிருந்து கிளந்தான் செல்லும் வழியில் அப்பேருந்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

பெட்டியிலிருந்த முகவரியைப் பார்த்தால், அனுப்புநர் கெடா கூலிமையைச் சேர்ந்தவர் ஆவார்.

பாசீர் பூத்தேவில் உள்ள ஒரு நபரிடம் ஒப்படைப்பதற்காக அந்த ஓணான்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

அவை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இருவரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.

பின்னர் போலீஸ் உத்தரவாதத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!