Latest

வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் 9 மாதங்களில் 55 பேர் கைது

கோலாலம்பூர், நவம்பர்-13,

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 55 மலேசியர்கள் வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 50 பேர் ஆண்கள் மற்றும் 5 பேர் பெண்கள் ஆவர்.

இந்த கைது 16 நாடுகளில் நடந்துள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.

ஆக அதிகமாக இந்தோனேசியாவில் 10 பேரும், சிங்கப்பூரில் 9 பேரும், கம்போடியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் 6 பேருமாக கைதாகினர்.

போதைப்பொருள் கும்பல்கள், வேலை தேடுபவர்கள், மாணவர்கள் மற்றும் வருமானம் குறைந்தவர்களையே பெரும்பாலும் குறிவைக்கின்றன.

பொய்யான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் இலவச பயண வாய்ப்புகள் மூலம் ஏமாற்றி, அவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு அக்கும்பல்கள் பயன்படுத்துவதாக போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!