
ஜகார்த்தா – மே-25 – இவ்வாண்டு ஹஜ் யாத்திரையின் போது சவூதி அரேபியாவில் 53 இந்தோனேசியர்கள் மரணமடைந்துள்ளனர்.
இருதயக் கோளாறே அதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது. மே 23 வரைக்குமான நிலவரப்படி 19 இறப்புகள் மோசமான இருதயக் கோளாறு மற்றும் இதய முடக்கத்தால் ஏற்பட்டவை.
அவர்களில் பலருக்கு ஏற்கனவே இருதயக் கோளாறு இருந்துள்ளது; இப்படியிருக்க உடல் உழைப்பை அவர்கள் சரிவர கவனிக்கத் தவறியதாக அமைச்சு கூறியது. இந்தோனேசியாவிலிருந்து இவ்வாண்டு புறப்பட வேண்டிய 203,320 யாத்ரீகர்களில் இதுவரை 157, 800 பேர் மெக்கா புறப்பட்டுள்ளனர்.