கோலாத்திரெங்கானு, ஜூலை 16 – 100 ஆண்டுளுக்கும் மேலான பழமை வாய்ந்த இரு பீரங்கி குண்டுகள் சுங்கை டுங்குன் ஆற்றின் முகத்துவாரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த ஆற்றின் முகத்துவாரத்தில் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த குத்தகையாளர் அந்த பீரங்கி குண்டுகளை கண்டார். இதனைத் தொடர்ந்து அந்த பீரங்கி குண்டுகளை Lesong Kuala Terangganu விலுள்ள மாநில தொல் பொருட்காட்சி நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன் நீர்ப்பாசன , மின்சார மற்றும் இயந்திர சேவைத்துறையின் பணியாளர்கள் அதனை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த பீரங்கி குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தொல் பொருட்காட்சி சாலை அதிகாரிகள் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.