Latestமலேசியா

522 பணியாளர்களுக்கு நற்சேவை விருதுகளை வழங்கி அழகுப் பார்த்த தொடர்புத் துறை அமைச்சு

புத்ராஜெயா, மே-17, தொடர்புத் துறை அமைச்சின் 522 பணியாளர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான நற்சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு முழுவதும் சிறந்த சேவையை வழங்கிய அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள், துறைகள் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அவ்விழா நடத்தப்பட்டது.

நேற்றைய முதல் கட்ட விருதளிப்பில் அமைச்சின் பணியாளர்களுக்கும் RTM ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக மலேசியத் தகவல் துறை, தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா உள்ளிட் நிறுவனப் பணியாளர்கள் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலிடமிருந்து நற்சேவை விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய ஃபாஹ்மி, அமைச்சின் பணியாளர்கள் மடானி அரசாங்கத்தின் சிந்தாத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து நற்சேவையாற்றி வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டுக்கான மொத்த விருது பெருநர்களின் எண்ணிக்கை 671 பேர் ஆகும்.

தீபகற்பத்தைச் சேர்ந்த 522 பேருக்கு நேற்று விருது வழங்கப்பட்டு விட்ட நிலையில் சபா-சரவாக்கைச் சேர்ந்த எஞ்சிய 149 பேருக்கு பின்னர் மண்டல வாரியாக வழங்கப்படவிருக்கிறது.

நற்சேவை விருதளிப்பில் துணை அமைச்சர் தியோ நீ ச்சிங், அமைச்சின் மூத்த அதிகாரிகள், ஊடக நண்பர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!