
பெட்டாலிங் ஜெயா, மே 23 – நேற்றிரவு, சிலாங்கூர் குடிவரவுத் துறை அமைச்சு, மலேசிய காவல்துறை, பொது செயல்பாட்டுப் படை, தேசிய பதிவுத் துறை, மலேசிய குடிமைத் தற்காப்புப் படை மற்றும் பெட்டாலிங் ஜெயா ஊராட்சி மன்றத்தோடு இணைந்து பெட்டாலிங் ஜெயா மென்தாரி நீதிமன்றத்தில் (Mentari Court) மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், மொத்தம் 597 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட குடிவரவுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்குபெற்ற இப்பரிசோதனையில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 1,597 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மலேசிய குடிவரவுத்துறை துணை இயக்குநர் ஜெனரல் ஜாஃப்ரி எம்போக் தாஹா (Jafri Embok Taha) கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள், தகுந்த அடையாள ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ்களில்லாமல் நாட்டில் வாழ்ந்து வந்தது இப்பரிசோதனையின் வழி கண்டறியப்பட்டுள்ளது. அதில் 11 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் 472 ஆண்கள் மற்றும் 125 பெண்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் மேல் விசாரணைக்காக குடிவரவு தடுப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜெனரல் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாக்கும் நபர்களுக்கெதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.