பெட்டாலிங் ஜெயா, மே 31 – கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள, ஏழு மாவட்டங்களில், ஜூன் ஐந்தாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரையில், நீர் விநியோகத் தடை ஏற்படும்.
ஆயிர் சிலாங்கூர் எனப்படும் மாநில நீர் நிர்வாக நிறுவனம், பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதனால், கோலாலம்பூர் உட்பட பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலாம், கோம்பாக், உலு சிலாங்கூர், மற்றும் குவாலா சிலாங்கூர் வட்டாரங்களில் வசிப்பவர்கள், நீரை சேமித்து வைக்கவும், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுன் அறிவுறுதப்படுகின்றனர்.