Latest
சிரம்பானில் சிவப்பு சமிக்ஞ்ஞை விளக்கை மீறிச் சென்றதால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி; வேன் ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டு

சிரம்பான், மே 6 – கடந்த சனிக்கிழமை, சிரம்பானில் பெர்சியாரன் செனாவாங் 1இல், சிவப்பு நிற சமிக்ஞ்ஞை விளக்கை மீறிச் சென்றதால், 21 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதி அவருக்கு மரணம் விளைவித்ததாக நம்பப்படும் வேன் ஓட்டுநர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இதனிடையே, 45 வயதான அந்த வேட் ஓட்டுனர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்நிலையில் வேட் ஓட்டுனருக்கு 7000 ரிங்கிட்டில்
ஜாமின் வழங்கப்பட்ட நிலை குற்றம் நிரூபிக்கும் வரை அவரின் வாகன லைசென்சும் பறிக்கப்பட்டது.
இவ்வழக்கு வருகின்ற ஜூலை 3ஆம் தேதி தொடருமென்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், தகுந்த தண்டனை வழங்கப்படுமென்றும் அறியப்படுகின்றது.