
லாஸ் ஏஞ்சல்ஸ், மே 8 – உலகளாவிய நிதி மற்றும் பொழுதுபோக்கு மையமாக நாட்டின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், ஐக்கிய அரபு சிற்றரசில் தீம் பார்க் எனப்படும் நீர்ப் பூங்கா திறக்கப்படும் திட்டத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.
இந்த கடற்கரை உல்லாசத் தளம் அபுதாபியின் யாஸ் ( Yas ) தீவில் அமைந்திருக்கும் உள்ளூர் நிறுவனமான மிரலுடன் இணைந்து உருவாக்கப்படும். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, இந்தியா , ஆசியா, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளைச் சேர்ந்த சுந்றுப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தை கொண்டிருப்பதாக டிஸ்னி தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த வாரம் சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு வருகை புரிவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பை டிஸ்னி வெளியிட்டுள்ளது.
டிஸ்னிலேண்ட் அபுதாபி உண்மையிலேயே டிஸ்னியாகவும், தனித்துவமான ஐக்கிய அரபு சிற்றரசாக இருக்கும் என்று டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் இகர் ( Rober Iger ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலகின் இந்த சந்திப்பில் அசாதாரண டிஸ்னி பொழுதுபோக்குக்கான சோலையாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்