Latestஉலகம்

MH17 ரஸ்யாதான் சுட்டு வீழ்த்தியது; ஐ.நா சிவில் விமானபோக்குவரத்து மன்றம் தீர்ப்பு

ஒட்டாவா , மே 13  – 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வானில் மலேசிய விமானமான MH17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு ரஷ்யாதான் காரணம் என்று ஐ.நா. விமானப் போக்குவரத்து மன்றம் திங்களன்று தீர்ப்பளித்ததாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எந்த வகையான இழப்பீடு வழங்குவது குறித்து அனைத்துவக சிவில் விமானப் போக்குவரத்து மன்றம் எதிர்வரும் வாரங்களில் பரிசீலிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் Amsterdamமில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அந்த தாக்குதலில் ஈடுபட்டதற்காக இரண்டு ரஷ்ய ஆண்கள் மற்றும் ஒரு உக்ரேனிய நபரை நெதர்லாந்து நீதிபதிகள் கொலைக் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

ஆனால் Moscow இந்தத் தீர்ப்பை மோசமானது என்று கூறியதோடு, அதன் குடிமக்களை நாடு கடத்தப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இது குறித்து கருத்துரைக்கும்படி வினவப்பட்டபோது Montrealலை தளமாகக் கொண்ட அனைத்துலக சிவில் விமான போக்குவரத்து மன்றம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

இதனிடையே இந்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MH17 விமானத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு உண்மையை அறிந்துகொள்வதற்கும் அந்த விமானம் தாக்கப்பட்டதற்கான நீதி மற்றும் அச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை கண்டுப்பிடிப்பதற்கு இந்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாகும் என்று நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!