
நொய்டா, மே-14 – இந்தியா, நொய்டாவில் வீட்டில் உள்ள பழையக் கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையைப் பயன்படுத்தியப் பிறகு தண்ணீரை ‘flush’ செய்த போது, அதனிருக்கை திடீரென வெடித்தது.
இதனால் அவ்விளைஞரின் உடலில் 35 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின் போது மகன் கைப்பேசியோ அல்லது வேறு எந்த மின்னணு சாதனத்தையோ பயன்படுத்தவில்லை என அவரின் தந்தைக் கூறினார்.
மின் கோளாறவும் நடக்கவில்லை; குளிரூட்டிகளும் பிற மின்னியல் உபகரணங்களும் நன்றாகவே இயங்கின என்றார் அவர்.
இந்நிலையில், மீத்தேன் (methane) வாயு குவிப்பே வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
அதாவது பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத கழிப்பறை குழாய்களில் மீத்தேன் வாயுக் குவியக் கூடும்.
காற்று போதுமானதாக இல்லாத போது அழுத்தம் காரணமாக வெடிப்பு நிகழக் கூடுமென அவர் சொன்னார்.
ஆனால், அக்கூற்றை நொய்யா மாவட்ட அதிகாரி மறுத்தார்; அங்கு குழாய் அமைப்புகள் அனைத்தும் சுத்தமாகவும், நல்ல முறையிலும் இயங்கி வருகின்றன;
சம்பந்தப்பட்ட வீட்டினுள் தான் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டுமென அந்த அதிகாரி கூறிக் கொண்டார்