
செப்பாங், மே-21 – Perodua Axia காரின் கூரையில் அதிக சுமைகளை ஏற்றி ஆபத்தான முறையில் டெங்கில் – பந்திங் சாலையில் சென்று வைரலான ஓட்டுநரை, போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் Facebook-கில் பதிவேற்றப்பட்டு வைரலான வீடியோவை அடுத்து போலீஸ் விசாரணையில் இறங்கியதாக, செப்பாங் போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.
அதே நாளில் அக்காரை அதே இடத்தில் கண்டு பிடித்த போலீஸ், உள்ளூர் ஆடவரான அதன் 59 வயது ஓட்டுநர் முறையான வாகனமோட்டும் உரிமத்தை வைத்திருப்பதை உறுதிச் செய்தது.
காருக்குமான அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தன.
சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி தலையில் படுகாயமுற்றதாகவும், இதனால் தனது உடல் நிலை சரியில்லை எனவும் அந்நபர் கூறிக் கொண்டார்.
விசாரணை முடிந்து போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும் பரிசோதனைக்காகவும் மேல் நடவடிக்கைக்காகவும் அவரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக வைரலான வீடியோவில் குப்பைகள்,
கூடைகள், கட்டில் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அச்சிறிய காரின் கூரையில் கட்டப்பட்டிருந்தன.
அவற்றில் சில பொருட்கள் சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததை, வேறு சில வைரல் வீடியோக்களில் காண முடிந்தது