Latestமலேசியா

கட்டாரிடமிருந்து விமானத்தைப் பெற்ற அமெரிக்கா; Air Force One-னாகப் பயன்படுத்தப்படும்

வாஷிங்டன், மே-22 – அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பயன்பாட்டுக்காக கட்டார் வழங்கிய போயிங் 747 சொகுசு விமானத்தை, அமெரிக்க தற்காப்பு அமைச்சர் Pete Hegseth முறைப்படி பெற்றுக் கொண்டுள்ளார்.

Air Force One-னா அவ்விமானத்தை டிரம்ப் பயன்படுத்துவார்; அதற்கு ஏற்ற வகையில் அவ்விமானத்தில் அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் இருப்பது உறுதிச் செய்யப்படுமென, அமெரிக்க தற்காப்பு அமைச்சான பெண்டகோன் கூறியது.

அமெரிக்கக் கூட்டரசின் அனைத்து சட்டத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்பவே அவ்விமானம் பெறப்பட்டுள்ளது.

இது அமெரிக்க அதிபருக்கு கட்டார் அரச குடும்பம் வழங்கும் பரிசு; மாறாக, டிரம்ப் என்ற தனி மனிதருக்கு அல்ல;

எனவே, விமானம் தொடர்பான முடிவுகள், பாதுகாப்பு மற்றும் சட்டக் கோட்பாடுகளுக்குள் மட்டுமே எடுக்கப்படும் என்றும் அது கூறியது

டிரம்ப் அண்மையில் கட்டாருக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அவ்விமான வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியானது.

எனினும், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான அவ்விமானம், அரசியலமைப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பியது.

ஒரு வெளிநாட்டு சக்தியால் நன்கொடையாக வழங்கப்பட்ட விமானத்தை அதி-உணர்திறன் மிக்க அதிபர் விமானமாகப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு கவலைகளையும் எழுப்பியது.

விமானத்தை மாற்றியமைக்க பெரிய செலவு செய்ய வேண்டியிருக்குமே என விமர்சகர்களும் சேர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!