Latestமலேசியா

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய பலூன்

கோலாலம்பூர், மே-23 – மறக்க முடியாத நாளாக விளங்க வேண்டிய மகனின் பிறந்தநாள், ஒரு பெற்றோருக்கு கிட்டத்தட்ட துயர நாளாக முடியும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மே 20-ஆம் தேதி மகனின் பிறந்தநாள் விழாவின் போது, இன்னும் ஊதப்படாத பலூன் அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டதாக, தாயார் நூருல் ஹூடா சுல்காய்ரி சமூக ஊடகத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.

நண்பர்களுடன் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியில் திளைத்திருந்த மகன் திடீரென மயங்கி விழுந்தான்; அவனது முகமும் நீல நிறமாக மாறியது.

சுயநினைவை இழந்தவனது இதயத் துடிப்பும் நின்று போயிருந்தது.

எனினும், மருத்துவரான தனது கணவர் உடனடியாக CPR முதலுதவி சிகிச்சையளித்து, கவலைக்கிடமான நிலையில் மகனை மருத்துவமனையில் சேர்த்ததாக நூருல் சொன்னார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் intubation எனப்படும் குழால் செருகல் மூலம், மருத்துவர்கள் அவனது தொண்டையில் சிக்கியிருந்த பலூனை வெளியே எடுத்தனர்.

தொடர்ந்து CPR சிகிச்சையளித்து மகனின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியதாக, நூருல் நிம்மதி பெருமூச்சுடன் தெரிவித்தார்.

நண்பர்களுடன் இருந்த போது ஒரு விளையாட்டாக அவன் பலூனை எடுத்து வாயில் போட்டிருக்கக் கூடும்.

ஒரு பலூனால் என் மகனையே நான் பறிகொடுத்திருப்பேன் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!