Latestமலேசியா

ஜாலான் கோத்தா பாரு-பாசிர் பூத்தேயில் கடத்தப்பட்ட ‘சியாம்’ அரிசி பறிமுதல்; கடத்தல்காரர் தப்பி ஓட்டம்

கோத்தா பாரு, மே 26 – நேற்று, ஜாலான் கோத்தா பாரு-பாசிர் பூத்தேயில், கடல்சார் காவல் படை (PPM) அதிகாரிகள் குழு, ‘சியாம்’ அரிசி கடத்தல்காரரை கையும் களவுமாக பிடிக்க முயலும் போது, 4,400 ரிங்கிட் மதிப்பிலான ‘சியாம்’ அரிசி கைப்பற்றப்பட்டது.

அதிகாரிகள் தன்னை பின் துரத்தி வருகின்றார்கள் என்றுணர்ந்த அந்தச் சந்தேக நபர், லாரியைப் படு வேகமாக செலுத்தி வந்து, சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, தப்பிச்சென்றதாக PPM முப்படைத் தளபதி ஜூலாஃபெண்டி ஹாசன் (Zulafendy Hassan) தெரிவித்துள்ளார்.

சியாம் அரிசி மூட்டைகள் மற்றும் லாரி உட்பட மொத்தம் 84,000 ரிங்கிட் மதிப்பிலானவைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் தேசிய நெல் மற்றும் அரிசி சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!