Latest

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முதன் முறையாக நடத்தும் கல்வித் திருவிழா

கோலாலம்பூர், மே-28 – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முதன் முறையாக கல்வித் திருவிழா எனும் நிகழ்வை நடத்துகிறது.

வரும் ஜூன் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொம்ப்ளெக்ஸ் மஷ்யாராக்காட் பெஞ்சாயாங் வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இது நடைபெறுகிறது.

அனைத்து மலேசியர்களும் இதில் பங்கேற்கலாம்; நுழைவு இலவசமாகும்.

SPM, STPM முடித்த இந்திய மாணவர்களுக்கு மேற்கல்வி மற்றும் தொழில் திறன் பயிற்சி குறித்த தகவல்களை வழங்கி உதவுவதே இந்நிகழ்வின் நோக்கம்.

இந்தக் கல்வித் திருவிழாவில் 19 உயர் கல்விக் கூடங்கள் பங்கேற்கின்றன.

ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்,
MSU, சைபர்ஜெயா பல்கலைக்கழகம், செகி கல்லூரி, யுனித்தார், செபராங் பிறை பாலிடெக்னிக் கல்லூரி, சமூகக் கல்லூரி உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.

மேற்கண்ட உயர் கல்விக் கூடங்களின் தகவல் கூடாரங்களில், மேற்கல்விக்கான பதிவுகள், கல்வி உபகாரச் சம்பளம், கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டி சேவைகளை மாணவர்களும் பெற்றோர்களும் பெறலாம்.

அதே நாளில் சிறப்பம்சமாக 2024 SPM தேர்வில் 7A மற்றும் அதற்கு மேல் பெற்ற 167 இந்திய மாணவர்களுக்கு, சிறந்த மாணவர் விருது வழங்கப்படும்.

பினாங்கு முதல் அமைச்சர் Chow Kon Yeow நேரில் பங்கேற்று விருதுகளை எடுத்து வழங்குவார்.

எனவே, நம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் இதில் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு இந்து அறப்பணி வாரியம் கேட்டுக் கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!