
கோலாலம்பூர், மே 28 -கோலாலம்பூரில் தாமான் Danau Kota வில் பராமரிப்பு நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த ஏழு மாத ஆண் குழந்தை இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கும் 11 மணிக்குமிடையே நடந்ததாக நம்பப்படுகிறது என்று Wangsa Maju மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப் ( Syahrul Anuar Abdul Wahab) தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்குழந்தையின் தந்தை அதே நாளில் மதியம் மணி 1.26 அளவில் ஸ்தாப்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அக்குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேத ரிசோதனை நடத்தப்பட்டதோடு 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் பிரிவு 31 (1) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக Syahrul Anuar வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் குழந்தை பராமரிப்பு நிலையத்தின் தரப்பினரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.