Latestமலேசியா

இ ஹய்லிங் ஓட்டுனர் தலைமையிலான போதைப் பொருள் கும்பல் முறியடிப்பு ரி .ம 5.11 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜூன் 6 – கிள்ளான் பள்ளத்தாக்கில் பொழுது போக்கு மையங்களுக்கு முக்கிய போதைப் பொருள் விநியோகிப்பாளராக செயல்பட்டு வந்த இ ஹெய்லிங் ஓட்டுநர் தலைமையிலான Alstonia கும்பல் முறியடிக்கப்பட்டதன் மூலம்
5.11 மில்லியன் மதிப்பிலான பல்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பல் நேரடி தொடர்பு மற்றும் இணையம் வாயிலாகவும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஓமார் கான்
( Hussein Omar Khan ) தெரிவித்தார். இக்கும்பலிடமிருந்து Proton Preve, Toyota Vios, Hyundai Sonata, Bmw மற்றும் Honda Civic ஆகிய 5 கார்களுடன்
நகைகள், விலையூர்ந்த கைப்பை மற்றும் 341,449 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வெளிநாட்டு பண நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஜூன் 3ஆம்தேதி கோலாலம்பூரில் மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட 5 திடீர் சோதனை நடவடிக்கையில் இ ஹெய்லிங் வாடகை கார் ஓட்டுநனரான உள்நாட்டு ஆடவரும் அவரது வெளிநாட்டு காதலியும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த எட்டு மாத காலமாக போதைப் பொருளை விநியோகித்து வந்தனர் என நம்பப்படுகிறது. அதன் பின் புக்கிட் ஜாலில் , செமினி, பூச்சோங்
மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட இதர நடவடிக்கையில் இதர சந்தேக நபர்களும் பெரிய அளவிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக உசேய்ன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39 B விதியின் கீழ் விசாரணக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!