
பாலிங், ஜூன் 6 – Kupang , Kampung Bukit Iboi யில் உள்ள ஒரு வயதான தம்பதியினர் நேற்று இரவு Hari Raya Aidiladha கொண்டாட்டத்திற்காக தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு ஒரு ராஜ நாகம் இருந்ததைக் கண்டு வயதான தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். அந்த பாம்பு மிகவும் ஆபத்தானது மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்த அவர்கள், உதவிக்காக தீயணைப்புப் படையைத் தொடர்பு கொண்டனர்.
அந்த வீட்டில் இரவு மணி 10.40 அளவில் மூன்று மீட்டர் நீளமுள்ள ராஜ நாகம் இருப்பது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக பாலிங் தீயணப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் உதவி கண்காணிப்பாளர் சுல்கைய்ரி மாட் தஞ்சில் ( Zulkhairi Mat Tanjil ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு அதிகாரி
ரம்டான் ருஸ்டான் ( Ramdan Rushdan ) தலைமையிலான பாலிங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்றனர். அந்த ராஜ நாகம் முரட்டுத்தனமாக செயல்பட்டதோடு ,வீட்டின் கூரையின் துவாரத்தில் நுழைவதற்காக செங்கல் சுவரில் ஊர்ந்து செல்ல முயன்றது. எனினும் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மிகவும் கவனமாக கையாண்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அந்த பாம்பை அவர்கள் வெற்றிகரமாக பிடித்தனர். இதனிடையே ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை 200 அவசர அழைப்புகள் பெறப்பட்டதாகவும் அவற்றில் பாலிங் மாவட்டத்தில் 50 பாம்புகள் பிடிக்கப்பட்ட அழைப்புகளும் அடங்கும் என Zulhairi Mat கூறினார்.