
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 9 – நேற்று, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸின் தெருக்களுக்கு, சட்டவிரோத குடியேறிகளை பரிசோதிக்கும் நடவடிக்கையில்,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய தேசிய காவல்படையினரிடமிருந்து போராட்டக்காரர்களை காவல் துறையினர் விலக்கி வைத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் வானங்களை எரித்து, பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தனது இரண்டாவது பதவிக்காலத்தில், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்ட ட்ரம்ப், வேண்டுமென்றே காவற்படையினரை அனுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியதாக கருத்துக்கள் பரவி வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் சட்ட அமலாக்கத்துறை குறைந்தது 56 பேரை கைது செய்துள்ளது என்றும் மேலும் 3 அதிகாரிகள் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
சமீப காலமாக, அமெரிக்க குடிவரவு துறை நடத்திய சோதனைகள், சிறிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அமைதியின்மை, டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக உருமாறியது குறிப்பிடத்தக்கது.