Latestமலேசியா

எறும்புகளால் சூழப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையின் வாரிசுகளைத் சமூக நலத்துறை கண்டறிந்துள்ளது

செகமாட் , ஜூன் 11 – லாபிஸ் பெல்டா ரெடோங்கில் மே 3 ஆம் தேதி ஒரு வீட்டின் முன் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் வாரிசுகளை சமூக நலத்துறை (ஜே.கே.எம்) கண்டறிந்துள்ளது. மஞ்சள் நிறத் தோல் கொண்ட குழந்தை தொப்புள் கொடியுடன் பாத்தேக் துணியால் சுற்றப்பட்டு ஆவணங்கள் இல்லாமல் எறும்புகளால் சூழப்பட்ட நிலையில் காணப்பட்டதாக சிகமாட் மாவட்ட சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

செகாமட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இக்குழந்தை தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு சமூக நலத்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் 25 (2) இன் பிரிவின் கீழ் , மே 23 ஆம் தேதியன்று இதற்கான அனுமதியை செகமாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமூக நலத்துறை பெற்றது என அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. குழந்தையின் தாய் அல்லது வாரிசுகள் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், செகாமட் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 07-9311331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!