Latest
மலாக்காவில் கொள்ளையடித்துவிட்டு ஊழியரை தாக்கி ஓடிய சம்பவம்

மலாக்கா, ஜூன் 14 – இன்று அதிகாலை மலாக்கா புக்கிட் பாருவிலுள்ள வளாகமொன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 24 மணி நேரம் இயங்கும் கடை ஒன்றின் ஊழியர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.
கொள்ளையனால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த ஊழியனின் காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
கொள்ளையர்கள் உலோகக் கம்பி போன்ற ஆயுதத்தை ஏந்தியிருந்தனர் என்றும் கவுண்டரிலுள்ள பண இயந்திரத்திலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊழியரை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியதாக பக்கத்துக்கு கடையிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இக்குற்றத்தை பற்றி போலீசார் மேல் விசாரணை செய்து வருவதாக மத்திய மலாக்கா மாவட்ட காவல் துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்துள்ளார்