
வாஷிங்டன், ஜூன்-16 – அமெரிக்காவின் ஊத்தா (Utah) மாநிலத்தில் அதிபர் டோனல்ட் டிரம்புக்கு எதிரான ‘No Kings’ போராட்டத்தில் சுடப்பட்ட ஆடவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அந்த மேற்கு அமெரிக்க மாநில போலீஸ் அதனை உறுதிப்படுத்தியது.
Salt Lake City-யில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் AR-15 பாணி அரை தானியங்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிகொண்டிருந்தார்; அப்போது மூன்றாவது நபர் அந்த 24 வயது ஆடவரை நோக்கி 3 முறை சுட்டார்.
அதில் ஒரு தோட்டா துரதிர்ஷ்டவசமாக 39 வயது Arthur Folasa Ah Loo மீது பட்டு அவர் உயிரிழந்ததாக போலீஸ் கூறியது.
நாடு முழுவதும் டிரம்புக்கு எதிராக நடைபெற்று வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களில் இந்த Salt Lake City போராட்டமும் ஒன்றாகும்.
Arturo Gamboa என அடையாளம் காணப்பட்ட AR-15 துப்பாக்கியை ஏந்திய நபர் “கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்”
இது ஆரம்பக்கட்ட குற்றச்சாட்டே; அரசு தரப்பு வழக்கறிஞர்களால் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் Gamboa தனது ஆயுதத்தால் சுடவில்லை என நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநகர போலீஸ் தலைவர் Brian Redd கூறினார்.
Gamboa-வை நோக்கி சுட்ட நகர் உயர் தெளிவுத்திறன் கொண்ட vest அங்கியை அணிந்திருந்தார்,
மேலும் அவர் போராட்டக்காரர்களுடன் தொடர்புடையவராகத் தெரிகிறார்; அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை, போலீஸுடன் அவர் ஒத்துழைத்தார் என்று Redd கூறினார்.
அதே சமயம் Gamboa மீது எந்த குற்றவியல் பின்னணியும் இல்லை; இந்நிலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவரது சாத்தியமான நோக்கங்கள் என்ன என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் ஆரம்ப கட்டங்களில் விசாரித்து வருவதாக Redd சொன்னார்.
கடந்தாண்டு நவம்பரில் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா தீவிர அரசியல் குழப்பங்களின் பிடியில் உள்ளது.