
இஸ்கண்டார் புத்ரி, ஜூன் 16 – கடந்த ஜூன் 12ஆம் தேதி, செலேசா ஜெயாவிலிருக்கும் வீடொன்றில் துர்நாற்றம் வீசியதாக வந்த புகாரைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பெண் ஆசிரியை ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த ஆசிரியர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் 24 முதல் அவர் பணியில் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதென்று இஸ்கண்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் எம்.குமரேசன் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, உடல் மிகவும் சிதைவுண்டதால் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும் இவ்வழக்கு திடீர் மரணம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.