
நொம்பென், ஜூன் 23 – ஆசியானின் இரு உறுப்பு நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்குமிடையே ஏற்பட்ட எல்லை தகறாரைத் தொடர்ந்து தாய்லாந்துடனான மேலும் இரண்டு எல்லை நுழைவுச் சாவடியை கம்போடியா மூடியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஹூன் மனெட் ( Hun Manet ) தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை முதல் Choub Korki யிலுள்ள எல்லை நுழைவு மையத்தை தங்கள் தரப்பு மூடுவதாக கம்போடியாவின் Oddar Meamchey வட்டாரத்தின் கவர்னர் தாய்லாந்து ராணுவத்திடம் தெரிவித்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்டு நாங்களும் எங்களது எல்லைப் பகுதியை மூடியுள்ளோம் என Hun Manet தெரிவித்தார். Choaub Korki எல்லை நுழைவு பகுதியோடு Choam எல்லைப் பகுதியையும் கம்போடியா மூடியிருக்கும் தகவலை நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் கூறினார். Buriram பிரதேசத்திலுள்ள Chong Sai Taku வர்த்தக மையம் சனிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டுள்ளதாக தாய்லாந்து ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே கம்போடியாவிலுள்ள தாய்லாந்து பிரஜைகள் மிகவும் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.