
அம்பாங், ஜூன் 25 – கடந்த வெள்ளிக்கிழமை, குளியலறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி தனது வீட்டுத் தோழர் குளிப்பதை காணொளியில் பதிவு செய்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு இன்று நீதிமன்றம் 3,300 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்நபர், குளியலறையில் கேமரா சாதனம் மறைவாக இருப்பதைக் கண்டுகொண்டதுடன், தனது வீட்டு நண்பரின் மேல் சந்தேகம் கொண்டு, அவரது மடிக்கணினியை பரிசோதித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தன்னுடைய குளிக்கும் காணொளிகளை சந்தேக நபரின் மடிக்கணினியில் கண்டத்துடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 30 வயதான முகமது ஃபஹ்மி அக்மல் ஜகாரியா, நீதிமன்றம் தனக்கு விதித்த அபராதத்தை முழுமையாக செலுத்தியுள்ளார்.
உடனிருக்கும் நண்பரின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட அந்த ஆடவனின் செயல் அருவருக்கத்தக்க ஒன்று எனவும் இன்றைய இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகின்றது.