
கோலாலம்பூர், ஜூன்-27 – தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை ஏற்பாடு செய்த பல்வேறு திட்டங்கள் வாயிலாக, 8,466 இந்தியத் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
இந்தியப் பெண் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் PENN திட்டம், பேங்க் ராக்யாட்டின் BRIEF-i கடனுதவித் திட்டம், SPUMI Goes Big கடனுதவித் திட்டம் உள்ளிட்டவை அவற்றிடங்கும்.
இந்தியத் தொழில்முனைவோரின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டை இத்திட்டங்கள் பிரதிபலிப்பதாக, துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் அனுகூலங்களைப் பெறுவதில் இந்தியர்கள் கைவிடப்படுவதில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மேம்பாட்டு வங்கியான SME Bank-கின் கீழ் ‘வணிகம்’ (Vanigham) கடனுதவித் திட்டத்தின் காசோலை வழங்கும் நிகழ்வில் பேசிய பிறகு, ரமணன் அவ்வாறு சொன்னார்.
இந்த ‘வணிகம்’ திட்டத்திற்கு SME Bank 50 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இயந்திரங்கள், வர்த்தக வாகனங்கள், தொழில் முதலீடு ஆகியவற்றுக்கு 100,000 முதல் 300,000 லட்சம் ரிங்கிட் வரையில் இத்திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
அசல் நிதி ஒதுக்கீடு 50 மில்லியன் ரிங்கிட் தான் என்றாலும், ‘வணிகம்’ திட்டத்திற்கு கிடைத்து வரும் மகத்தான ஆதரவைத் தொடர்ந்து SME Bank உண்மையில் 140 மில்லியன் ரிங்கிட்டை அங்கீகரித்துள்ளது.
பெரிய கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களை, SME Bank-கின் மற்ற கடனுதவித் திட்டங்களின் கீழ் வைத்ததன் மூலம் இது சாத்தியமானதாக ரமணன் கூறினார்.
நேற்றைய நிகழ்வில் முதல் குழுவினராக 20 இந்தியத் தொழில்முனைவோர்மொத்தம் 2 மில்லியன் ரிங்கிட் கடனுதவிக்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்டனர்