Latestமலேசியா

மேம்பாடு நிதியை பெற்ற தேசிய வகை புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளி

சுங்கை பிலீக், ஜூன் 27 – நேற்று காலை, தேசிய வகை புக்கிட் இஜோக் தமிழ்ப்பள்ளியில், பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவின் வழி (ICU) கிடைக்கபெற்ற நிதி ஒதுக்கீடு ஒப்படைப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், சிப்பாங் மாவட்ட மஇகா துணைத்தலைவர் சந்திரசேகரன் அருணாச்சலம், மற்றும் மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

பள்ளியின் வளர்ச்சி நிதியாக 20,000 ரிக்கிட்டை சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித்துறை துணை அமைச்சர் YB டத்தோ ஹாஜா ஐமான் அத்திரா (Datuk Hajah Aiman Athirah) சார்பில் சுங்கை பீலிக் சட்டமன்ற உறுப்பினர் லூய் கியன், வளர்ச்சி நிதியைப் பள்ளிக்கு வழங்கியுள்ளார்.

16 மாணவர்களை மட்டுமே கொண்டியங்கிய அப்பள்ளியில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் வழங்கப்பட்ட20,000 ரிங்கிட் பள்ளி மேம்பாட்டிற்கும் விரிவாகத்திற்கும் பயன்படுத்தவிருப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளிக்கு அருகாமையிலுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு ஒதுக்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இப்பள்ளியின் உருவாக்கத்திற்கு கடந்த 30 ஆண்டு காலமாக அரும்பாடுப்பட்ட முன்னாள் மேலவை உறுப்பினர் மறைந்த செனட்டர் டத்தோ வி. க செல்லப்பன் அவர்களின் பெயரைப் பள்ளிக்கு சூட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!